google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

திராவிட நாட்டுப் பண்

திராவிட நாட்டுப் பண்

[இசை - மோகனம்] [தாளம் - ஆதி]

 (பல்லவி)

வாழ்க வாழ்கவே

வளமார் எமதுதி ராவிடநாடு

வாழ்க வாழ்கவே!

 

(சரணங்கள்)

சூழும் தென்கடல் ஆடும் குமரி

தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்

ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்

அறிவும் திறலும் செறிந்த நாடு. (வா)

 

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்

கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு. (வா)

 

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்

அறிவின் விளைவும் ஆர்ந்திடு நகடு

வெள்ளைப் புனலும் ஊழித்தீயும்

வேகச் சீறும் மறவர்கள் நாடு. (வா)

 

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்

அழகாய் முத்துக் குவியும் கடல்கள்

முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்

முல்லைக்காடு மணக்கும் நாடு. (வா)

 

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கியநாடு. (வா)

 

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்

சாற்றில் தென்றல் காற்றில் நல்ல

ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்

அழகில் கற்பில் உயர்ந்த நாடு. (வா)

 

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யலவிப்

பொன்னார் இழையும் துகிலும் பூண்டு

கனிமொழி பேசி இல்லறம் நாடும்

காதல் மாதர் மகிழுறும் நாடு. (வா)

 

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க

தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க

இங்குத் திராவிடர் வாழ்க மிகவே

இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு. (வா)


                    _பாரதிதாசன் 



வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஃபேஸ்புக்கில் வலம் வரும் 20 பொய்கள்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்:

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும். 

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். 

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். 

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். 

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. 

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ...

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ... குழந்தைகளையும் பழக்குவோம் ...

அது அறிவியல் ஆகட்டும் ...எதுவாகட்டும் ...

இறை சக்தி நம்மை காக்கட்டும் ...
🙏🙏🙏

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

_ பாவேந்தர் பாரதிதாசன்

சனி, 20 ஆகஸ்ட், 2022

புழுவாய்ப் பிறக்கினும்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

_தேவாரம் -நான்காம் திருமுறை- திருநாவுக்கரசர்

தலம்: திருப்பாதிரிப்புலியூர் 
பண்: திருநேரிசை 

திருப்பாதிரிப்புலியூர் என்னும் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது கடலூரின் ஒரு பகுதி.

வேறு பெயர்: திருப்பாப்புலியூர்

சுவாமியின் பெயர்கள்:
தோன்றாத்துணை யீஸ்வரர், பாடலீஸ்வரர்

தேவியாரின் பெயர்கள்:
தோகையம்பிகையம்மை, பெரியநாயகி, அருந்தவநாயகி

பொழிப்புரை :
இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பொன்னமராவதியில் சுயம்வரம்

பொன்னமராவதியில் விஸ்வகர்மா இலவச ஜாதக பரிவர்த்தனை விழா

அண்ணாமலை திருமண மண்டபத்தில் 07.08.2022 ஞாயிறு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை.

நடத்துபவர்கள்: 
விஸ்வகர்மா சுயம்வர சங்கமம்

திருமணத்திற்காக பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ தேடுகிறீர்களா? இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஃபேஸ்புக்கில் நான் கண்ட விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, 

தற்போது மதுரையில் இருந்து.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

என் வீட்டுக்கு வரும் வழி

மதுரை குலமங்கலம் ரோடு எஸ். ஆலங்குளம் ஸ்ரீ ராகவேந்திரா நகர் என்னும் இடத்திற்குச் செல்லும் ரோடு இதுவே. 

23 ஜூலை 2022 அன்று ரோட்டைத் தோண்டினார்கள். குழாய் பதித்தார்கள். மூடினார்கள். 

இன்று பெய்த மழைக்கு,  தோண்டப்பட்ட இடங்களில் ரோடுஅமுங்கி விட்டது. என் வீட்டின் எதிரே உள்ள ரோட்டின் படத்தை கீழே காண்கவும்.




பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, 

தற்போது மதுரையில் இருந்து.

திங்கள், 18 ஜூலை, 2022

புதுசு புதுசா கிளப்புறாங்க சோஷியல் மீடியாவில்

அண்மையில் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் நான் கண்ட புதுக் கிளப்பல்:

திருமண அழைப்பிதழில் உள்ள சுவாரசியமான விஷயம் என்ன?

நாம அடிக்கடி பார்க்கிற திருமண அழைப்பிதழிலேயே பெரிய தகவல் உள்ளது.

மணமகன் / மணமகள் பெயருக்கு முன் திருவளர் செல்வன் / திருவளர் செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.

திருநிறைசெல்வன் / திருநிறை செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் இளைய மகன் / மகளின் திருமணம்.

திருவளர்செல்வன் / செல்வி எனக் குறிப்பிடும்போது நடக்கவுள்ள திருமணம் எங்களது இல்லத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.

எங்களுக்கு இளைய மகன் / மகள் உள்ளதால் எங்கள் இளைய மகனுக்கு திருமண வயது நிரம்பும் போது உங்கள் வீட்டுக்கு பெண் / பையனுக்கு திருமண வயது நிரம்பியிருந்தால் மாப்பிள்ளை / பெண் கேட்டு எதிர்காலத்தில் நாங்கள் ‌‌வரலாம் என்பதை சூசகமாக குறிப்பது.

இதே திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி என்று குறிப்பிட்டிருந்தால் எங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவுற்றன. இதுவே எங்கள் வீட்டின் இறுதித் திருமணம். இனி எங்கள் வீட்டில் திருமண நிகழ்வுகள் இல்லை என்று உணர்த்துவது.

இவ்வாறு தவறான விளக்கம் கொடுக்காதீர்கள். தமிழைக் கெடுக்காதீர்கள்.

திருவளர்செல்வன், திருநிறைசெல்வன், திருவளர்செல்வி, திருநிறைசெல்வி ஆகிய இந்நான்கும் வினைத்தொகை. செல்வம், அழகு முதலியன வளர்ந்த, வளர்கின்ற, வளரும், நிறைந்த, நிறைகின்ற, நிறையும் என்று முக்காலங்களையும் குறிக்கும். வினைத்தொகை என்பதால் வலிமிகா இடம். ஒற்று வராது. ஆகவே திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன், திருவளர்ச்செல்வி, திருநிறைச்செல்வி என்று சொல்லக்கூடாது.

இந்த இடத்தில் திரு என்பது திருமணம் என்ற பொருளில் வரவில்லை. செல்வம், அழகு, பொலிவு, நல்வினை, பாக்கியம் என்றே பொருள்படும். அது மட்டும் அல்ல. திரு என்பதற்கு மாங்கல்யம் என்றும் ஒரு பொருள் உண்டு. திருப்பூட்டுதல் என்றால் தாலிகட்டுதல் ஆகும்.

திரு என்பதற்கு இலக்குமி (லட்சுமி/லக்ஷ்மி) என்றும், கடவுள் தொடர்புடைய என்றும் பொருள். (எ.டு) திருமாங்கல்யம், திருவீதி உலா, திருவிளையாடல், திருப்பதி, திருமலை.

தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தமிழ் விலையில்லாப் பாடநூல் அறுபத்து ஆறாம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு உள்ளது.


பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, 

தற்போது மதுரையில் இருந்து.



இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் ஏன் தலை வணங்கினான்?

இராமாயணத்தில் , இந்திரஜித்தின் மிக வலிமையான பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் கட்டுப்பட்டுத் தலைவணங்கியதன் பின்னணியில் மிக ஆழமான , சுவாரச...