google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூலை 2021

புதன், 28 ஜூலை, 2021

ரேஷன் அரிசிக் கடத்தல்

எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து இன்று வரை ரேஷன் கடை அரிசியின் தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மை. நான் சிறுவனாக இருந்த போது ரேஷன் கடை அரிசி நாறும். முகத்தைச் சுளிக்க வைக்கும். கற்கள் நிறைந்திருக்கும். தூசி மிகுந்திருக்கும். புடைக்க வேண்டும். அரிக்க வேண்டும். பலமுறை கழுவ வேண்டும்.

ஆனால்  ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக ஓரளவு நல்ல அரிசி கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது. புடைக்கத் தேவையில்லை. கற்கள் இல்லவே இல்லை. கலப்படம் இல்லை. பாராட்டுகள். தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு நன்றி.

இருப்பினும் இம்ப்ரூவ்மெண்ட் என்பதைச் செய்துகொண்டே இருக்கலாம்.

எனக்கு விபரம் தெரிந்த அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை ரேஷன் அரிசிப் பதுக்கலும் கடத்தலும் நடக்கின்றன என்று செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரிசிக் கடத்தல் மட்டுமே முன்னிலைப்படுத்தப் படுகின்றது. யாருக்கும் தெரியாத வகையில் மற்ற பொருட்களும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?

சட்டம் வேறு; நடைமுறை வேறு. சட்டம் கடுமையாக இல்லை. காப்பானை விட, கள்ளன் வலிமையானவன். அரசாங்கத்தின் வலிமை குறைவு. சில பல அரசு ஊழியர்கள் கயவர்கள். கடத்துபவர்கள் அரசைவிடத் திறமையானவர்கள். நெளிவு சுழிவு அறிந்தவர்கள். அப்படிப்பட்ட திறமை, காக்கும் அரசுக்கு இல்லை.

தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஓரளவு நன்றாய் இருப்பது    நமக்குத் தெரியவில்லை; ஆனால் கடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இந்நிலையை மாற்றத்தக்க நடவடிக்கையை உரியவர்கள் எடுத்தால் தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் தடைகள் குறையும்.

பிற பின்பு

அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து.

செவ்வாய், 27 ஜூலை, 2021

மட்டன் தம் பிரியாணி சுலபமா செய்வது எப்படி?


சோழவந்தானில் உள்ள என் நண்பனது வீட்டில் அருமையாக மட்டன் தம் பிரியாணி செய்கிறார்கள். இது ஒரு நல்ல சுவையான பிரியாணி. 

கார சிக்கன் கிரேவி செய்வது எப்படி


என் நண்பனது சோழவந்தான் வீட்டில் அருமையாக கார சிக்கன்  கிரேவி செய்கிறார்கள். இது ஒரு நல்ல சுவையான கோழிக்குழம்பு.

புதன், 21 ஜூலை, 2021

93 வயது அப்பாவின் தடுப்பூசி சர்டிபிகேட்

சில ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவின் இடுப்பிலுள்ள பந்துக்கிண்ண மூட்டு உடைந்ததால் Bipolar hemi orthro plasty அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. மேலும் வயதானதால் இப்போது அவரால் நடக்க முடியவில்லை. ஆகையால் தடுப்பூசியை பொன்னமராவதி புதுப்பட்டியில் வீட்டுக்கே வந்து போட்டுவிடும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி ஜூன் 26, 2021 அன்று வீட்டுக்கே வந்து அவருக்கு தடுப்பூசி போட்டார்கள். 

அப்பாவின் பெயர் நடராஜன். தடுப்பூசி சர்டிபிகேட்டில் அவருடைய அப்பாவின் பெயராகிய முத்துக்குமார் என்று இருந்தது. இணையதளத்தில் ஒரு முறை பெயரைத் திருத்தும் வசதி உண்டு.
அதன்படி சரி செய்யப்பட்டது.

சுகாதாரத் துறையின் அன்பும்,  பரிவும், துரித நடவடிக்கையும், பாராட்டத்தக்கனவாகும். 

தடுப்பூசி போட்டுக்கொள்வது நமக்கு மட்டும் அல்ல இந்த உலகத்துக்கே நல்லது என்கிறார் என் அப்பா. உண்மைதானே!

பிற பின்பு
வணக்கம்
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
தற்போது மதுரையிலிருந்து

சனி, 17 ஜூலை, 2021

பழநி முருகனும் பொன்னமராவதி செட்டியாரும்

அரு.ச.முரு.சேது செட்டியார் பொன்னமராவதி புதுப்பட்டியில் மிகவும் பிரபலமானவர். இவரே சண்முகநாதனுக்கும் பாஸ்கரனுக்கும் தந்தை. அவர்களுக்கு பழநியில் தங்கி சாமி கும்பிட வசதிகள் உண்டு. சொந்த பந்தங்களுடன் தங்கி அன்னதானம் செய்வது வழக்கம்.

ஒருமுறை மிகப்பெருங்கூட்டம் சாப்பிடுவதற்குக் கூடிவிட்டது. எல்லோருக்கும் சாப்பாடு போட முடியுமா என்ற கலக்கம் ஏற்பட்டுவிட்டது. 

உறவினர்களில் சிறுவர்களும் அடக்கம். அவர்கள் பசி தாங்க மாட்டார்கள் என்று கருதி கொஞ்சம் சாப்பாட்டைத் தனியாக பத்திரப்படுத்தினார்கள்.

ஆனால் என்ன அதிசயம்! சாப்பாடு குறையவே இல்லை. பெரும் கூட்டம் சாப்பிட்டு முடிந்து சென்ற பின்பும் அண்டா அண்டாவாக நிறைய இருந்த சோறு அப்படியே இருந்தது.

பழநிமலை முருகன் தன் அருளையும் ஆசியையும் அன்னத்தை வளரவிட்டு உலகத்தினர் கண்முன் காட்டினான்.

கண்டோர் அனைவரும் வியந்தனர். மிகவும் பரவசமடைந்தனர்.

இதை என் தந்தையாகிய நடராஜன் ஆச்சாரி சொல்வதைக் கேட்டு பதிவிடுகிறேன்.

பிற பின்பு
வணக்கம் 
அன்புடன் 
ஆறுமுகம் நடராஜன் 
இப்போது மதுரையில் இருந்து.



சனி, 3 ஜூலை, 2021

நொடி வினாடி குழப்பம்

நொடி வேறு வினாடி வேறு. இரண்டையும் இப்போது குழப்புகிறார்கள். தொலைக்காட்சி ஆகட்டும், வானொலி ஆகட்டும், செய்தித்தாள் ஆகட்டும் அணையிலிருந்து வினாடிக்கு இவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

சிலர்அந்தக் கணக்கு ஒரு நொடிக்கு ஆனது என்று நினைக்கிறார்கள். சிலர் அது ஒரு வினாடிக்கு ஆனது என்று நினைக்கிறார்கள்.

வினாடியில் கூறுவது பழைய முறை.

சம்பந்தப்பட்டவர்கள் இந்த அறிக்கையை வினாடிக்கு என்று சொல்லாமல் நொடிக்கு இவ்வளவு நீர் என்று கணக்கிட்டுச் சொன்னால் எல்லோருக்கும் புரியும். அல்லது இரண்டு விதமாகவும் சொல்லலாம். இது குழப்பத்தைத் தவிர்க்க உதவும். 

ஆங்கிலத்தில் கியூசெக்ஸ் என்று தெளிவாகச் சொல்கிறார்கள். ஒரு செகண்டுக்கு இத்தனை கன அடி திறக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

cusecs: a unit of flow (especially of water) equal to one cubic foot per second.

இப்போது வினாடிக்கும் நொடிக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி நேரம்.
ஒரு  நாழிகைக்கு 24 நிமிடம்.
60 வினாடி என்பது ஒரு நாழிகை.
60 வினாடி என்பது 24 நிமிடம்.
60 நொடி என்பது ஒரு நிமிடம்.

அப்படியானால்
ஒரு வினாடி என்பது 24 நொடி.

எடுத்துக்காட்டாக மேட்டூர் அணை நிலவரம் இருமொழிகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Mettur Dam Water Level on 02-07-2021: 83.290/120 அடி/Feet

Inflow: 1100 கன அடி/Cusecs

Outflow: 15,000 கன அடி/Cusecs

Available Water: 43.315/93.47 T.M.C

இதிலிருந்து எல்லோரும் நொடியை தவறாக வினாடி என்கிறார்கள் என்பது புரிகிறது. ஆகவே தயவுசெய்து நொடி என்று குறிப்பிடவும்.

பிற பின்பு 

வணக்கம் 

அன்புடன் 

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி

வெள்ளி, 2 ஜூலை, 2021

கள்ளும் காதலும்

குறள் 1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

மு.வரதராசனார் உரை:

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

சாலமன் பாப்பையா உரை:

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

பரிமேலழகர் உரை:

(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. '

மணக்குடவர் உரை:

அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

Translation:

The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;

But love hath rare felicity For those that only see!.

Explanation:

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.


வியாழன், 1 ஜூலை, 2021

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

குறள் விளக்கம்:

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது (௪௱௮௰௬)
_புலியூர்க் கேசிகன்


ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. (௪௱௮௰௬)
—மு. வரதராசன்

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும். (௪௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும் (௪௱௮௰௬)
—மு. கருணாநிதி

பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.

நாமக்கல் கவிஞர்:
ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.

பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.

காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.

வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.

தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping back in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...