google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அக்டோபர் 2020

சனி, 31 அக்டோபர், 2020

நல்வழி வெண்பா 24


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ்மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 

                        __ ஔவையார், நல்வழி, வெண்பா 24

விளக்கம்
திருநீற்றை அணியாத  நெற்றி வீணானதாகும். நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும். நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும். ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும். நற்குணம் கொண்ட மனைவி இல்லாத வீடு வீணானதாகும்.

 கருத்து:

திருநீற்றால் நெற்றியும், நெய்யால் உணவும், நதியால் ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியால் வீடும் சிறப்படையும்.

வியாழன், 29 அக்டோபர், 2020

அந்தணர் என்போர் யார்?

 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

__குறள் 30 [திருக்குறள் ௩௰ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள் :

அந்தணர்கள் என்பவர்கள் அறத்தை காப்பவர்கள். ஆதலால் அவர்களை அறவோர் என்று கூறுவர். அவர்கள் மற்ற எல்லா உயிர்களுக்கும் தீமை ஆற்றமாட்டேன் அருளை / கருணையை மட்டுமே ஆற்றுவேன் என்பதை விரதமாக பூண்டு அதன் படி வாழ்கின்றவர்கள்.

 பரிமேலழகர் உரை:

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

 மணக்குடவர் உரை:

எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

மு. வரதராசனார் உரை:

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

 சாலமன் பாப்பையா உரை:

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

கலைஞர் உரை:

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.

புலியூர்க் கேசிகன் திருக்குறள் புதிய உரை:

எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்

Translation:

Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,

Explanation:

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

ஆங்கிலம் (English)

antaṇar eṉpōr aṟavōrmaṟ ṟevvuyirkkum

centaṇmai pūṇṭoḻuka lāṉ.

(Transliteration)

ஆங்கிலம் (English)

Ascetics are called men of virtue For they assume the role of mercy for all that live.

ஹிந்தி (हिन्दी)

करते हैं सब जीव से, करुणामय व्यवहार

कहलाते हैं तो तभी, साधु दया-आगार (३०)

தெலுங்கு (తెలుగు)

కరుణ జూపువారె కష్టపెట్టకొకరి

బ్రాహ్మణులుగ జెప్పఁబడెడువారు (౩౦)

மலையாளம் (മലയാളം)

ജിവരാശികളിൻ നേരെ ദയവുള്ളവരാകയാൽ  അന്തണരെന്നറിവോരെ മുനിമാരെന്നുരക്കാലാം  (൩൰)

கன்னடம் (ಕನ್ನಡ)

ಧರ್ಮ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವವರೇ ಅಂದಣರು (ಬ್ರಾಹ್ಮಣರು) ; ಏಕೆಂದರೆ ಅವರು ಮತ್ತೆಲ್ಲ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ನಿಜವಾದ ಕರುಣೆಯಿಂದ ಕಾಣಲು ಪ್ರತಿಜ್ಞೆ ಮಾಡುತ್ತಾರೆ. (೩೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)

सर्वभूतदयासान्द्रा: ये तु धर्मपरायणा:

एव ब्राह्मणा: प्रोक्ता: यतय: संशितव्रता (३०)

சிங்களம் (සිංහල)

සව් සත වෙත පතළ - මෙත් බර හදැති උතූමෝ පැවිදිවි නො සිටියද - සාදු ගූණයෙන් මුනිවරුම වෙන් (𑇬)

சீனம் (汉语)

有道者稱爲婆羅門; 慈憫一切衆生. (三十)

— 程曦 (古臘箴言)

மலாய் (Bahasa Melayu)

Brahman juga harus di-lihat sa-bagai manusia yang telah menolak dunia: kerana mereka menyayangi semua kehidupan.

Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)

거룩한 사람은 모든 사람들에게 연민을 보여주는 고결한 사람이다. (三十)

உருசிய (Русский)

Истинный праведник — брахман украшен драгоценным рубином праведной жизни и добросердечия ко всем живым существам

அரபு (العَرَبِيَّة)

العلماء هو الذين يسلكون دائما مسلك الصدق ويحبون العالم أجمع (٣٠)

பிரெஞ்சு (Français)

Ceux qui sont appelés andanars, à cause de leur conduite, pleine de vraie compassion pour tout ce qui a vie, ne sont autres que les ascètes.

ஜெர்மன் (Deutsch)

Die Gütigen leben ihrem dharma gemäß – sie zeigen ihre Freundlichkeit allem Lebendigen in der Welt.

சுவீடிய (Svenska)

Hedersnamnet ”Andanar” tillkommer de ädla som med godhet bemöter alla varelser på sin väg.

இலத்தீன் (Latīna)

Qui Antanar (i. e. pulchra lenitate praediti) vocantur, virtutem colunt (vel: qui virtutem colunt, Antanar vocantur), quia hi, in omne vivum pulchra lenitate induti, vitam agrunt. (XXX)

போலிய (Polski)

Aż przejęty ogromną litością dla świata, Sam się złączył z powszechnym potokiem.

Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)

நல்வழி வெண்பா 25

 

ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

                                                                                             __ ஔவையார்

 

விளக்கம்
ஒருவன் தன் வருவாயை விட மிகுதியாகச் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும். போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போலப் பாவித்துத் தவிர்ப்பர். ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...