ஞாயிறு, 16 அக்டோபர், 2022
சிற்றூர், பேரூர், பட்டணம்
ஞாயிறு, 25 செப்டம்பர், 2022
திராவிட நாட்டுக் கொடி வணக்கம்
வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்!
நானில மேல்அதன் மாண்பினைக் காண்பதில்
நாம் நன்றுசேர இணங்குவோம்.
ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் -- அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லவோ?
விண்ணிடை ஏறிய எங்கள் மணிக்கொடி
வெல்க வெல்க வெல்க வெல்கவே!
மண்ணில் உயர்ந்த திராவிட நாட்டினர்
மாட்சி மணிக்கொடி வெல்கவே!
திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே!
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே!
திராவிட நாட்டுப் பண்
திராவிட நாட்டுப் பண்
[இசை - மோகனம்] [தாளம் - ஆதி]
(பல்லவி)
வாழ்க வாழ்கவே
வளமார் எமதுதி ராவிடநாடு
வாழ்க வாழ்கவே!
(சரணங்கள்)
சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு. (வா)
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு. (வா)
அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நகடு
வெள்ளைப் புனலும் ஊழித்தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு. (வா)
அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக்காடு மணக்கும் நாடு. (வா)
அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கியநாடு. (வா)
ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு. (வா)
புனலிடை மூழ்கிப் பொழிலிடை யலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு. (வா)
திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு. (வா)
_பாரதிதாசன்
திங்கள், 21 டிசம்பர், 2020
தமிழனே இது கேளாய்
Makkal Nalaththirku
சனி, 9 நவம்பர், 2019
பாவேந்தர் பாரதிதாசனின் சிறந்த திரையிசைப்பாடல்கள்
பாவேந்தர் தமிழுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது . ஆழம் பொதிந்த இலக்கிய நடையுடன் கவிநயம் படைக்கும் கவிஞரின் பாடல்களில் சில திரையிசையாக ஒளிக்கின்றன . அவற்றில் சிலவற்றை தொகுத்து தந்துள்ளோம் . தமிழுக்கும் அமுதென்று பேர் ... சங்கே முழங்கு .. புதியதோர் உலகம் செய்வோம் ...
From: https://www.youtube.com/watch?v=_7qy_W5n8G8
இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் ஏன் தலை வணங்கினான்?
இராமாயணத்தில் , இந்திரஜித்தின் மிக வலிமையான பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் கட்டுப்பட்டுத் தலைவணங்கியதன் பின்னணியில் மிக ஆழமான , சுவாரச...
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...

