google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூன் 2021

சனி, 26 ஜூன், 2021

தடுப்பூசி

பொன்னமராவதி புதுப்பட்டியில் வாழ்வது சுகமானது.

சுக+ஆதாரம் = சுகாதாரம் என்று நினைக்கிறேன். இதற்குத் தமிழில் உடல் நலம் என்பர்.

நல்லொழுக்கம், பண்பாடு, பக்தி, அன்பு, கருணை, உதவி, விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்குவது பொன்னமராவதி தாலுகா புதுப்பட்டியும் ஆகும்.

அரசு அலுவலர் ஆகட்டும், கடைக்காரர் ஆகட்டும், ஊழியர் ஆகட்டும், ஏழை ஆகட்டும், பணக்காரன் ஆகட்டும், எவரேனுமாக இருக்கட்டும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏமாற்ற மாட்டார்கள். பிறரது துன்பத்தை உணர்வார்கள். 

26.6.2021 அன்று இதை நான் முற்றிலும் உணர்ந்தேன்.  நான் பிறக்கக் காரணமான என் அப்பா உயர்திரு, மேன்மைமிகு, அறிவுமிகு, ஆற்றல்மிகு, சிந்தனைமிகு, சிறப்புமிகு, உண்மைமிகு, உயர்வுமிகு, பாசமிகு, நேசமிகு, பகுத்தறிவுமிகு, மாண்புமிகு, கடமைமிகு, கண்ணியம்மிகு, கட்டுப்பாடுமிகு, பொறுமைமிகு, பேராற்றல்மிகு, சகிப்புத்தன்மைமிகு, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தகர வேலை மு. நடராஜன் ஆச்சாரி வயது 93 அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. பிடாரி ஆத்தா கோயிலின் அருகில் வர்த்தகர் சங்கத்தாரின் கல்யாண மண்டபம் உள்ளது. அங்கே முகாம் அமைத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தார்கள். என் அப்பா வாழும் வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவு.

என்னைப் பெற்ற அப்பா ஒரு மாற்றுத் திறனாளி. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் இடுப்பின் பந்துக்கிண்ண மூட்டு ஒடிந்ததால் திறமைமிகு டாக்டர்களால் அறுக்கப்பட்டு எவர்சில்வர் எலும்பு பொருத்தப்பட்டு கர்வ நடை நடக்க மறுக்கப்பட்டு எல்லாம் வல்ல முருகன் அருளால் நற்கதி அடையக் காத்திருப்பவர் அவர்.

முகாமுக்குச் சென்றேன். மாற்றுத் திறனாளியான சூப்பர் சீனியர் சிட்டிசன் ஆன அப்பாவுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

என் வேண்டுகோளைச் செவிமடுத்த தலைமை டாக்டர் கெட்டிக்கார மகா உத்தமர் என்றே நினைக்கின்றேன். நேரம், கூட்டம், வேலைப்பளு, முதலியவற்றைக் கணக்கிட்டு தாமதிக்காமல் என் அப்பாவுக்கு அவர் படுத்திருக்கும் படுக்கைக்கே சென்று தடுப்பூசி போடுமாறு ஆணையிட்டார். 

அங்ஙனமே போடப்பட்டது. 

வாழ்வில் நான் அடைந்த பெருமகிழ்வு இதுவே ஆகும்.

இதை என் தம்பி சென்னையில் வாழும் ஸ்கைலாப் பழநியப்பனிடம் ஃபோனில் சொன்னபோது அவன் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் அதைப் பெற உங்கள்  ஃபோனில் இடம் இல்லாமல் போகும்.

பணிவன்புடன்
ஆறுமுகம் நடராஜன்.

வெள்ளி, 25 ஜூன், 2021

நம்பலாமா இந்த நம்பிக்கையை!

நல்ல நேரம் பார்க்கும் போது கவனிக்கத்தக்கவை:

ஒரு நல்ல செயலைச் செய்யத் தொடங்கும்முன் நல்ல நேரம் பார்த்துச் செய்வது வழக்கத்தில் உள்ளது. ஆகவே ஒரு செயலைத் தொடங்குவதற்கு நல்ல நேரம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை யாவை என்று பார்ப்போம்.

நல்ல நேரம் பார்க்கும்போது அன்று கரிநாளாக இருக்கக் கூடாது.

 அஷ்டமி நவமி திதிகளை தவிர்க்க வேண்டும்.

யோகம் மரண யோக வேளையாக இல்லாமல் சித்த அமிர்த யோகமாக இருக்க வேண்டும்.

ஓரைகளில் சூரியன் செவ்வாய் சனி ஓரை இல்லாமல் பிற சுப ஓரைகள் இருந்தால் நல்லது.

பஞ்சகங்களில் பொதுவாக அக்னி சோர ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அக்னி சோர ரோக பஞ்சகங்களில் திருமணம் சீமந்தம் புதுமனை புகுதல் போன்ற காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதைப் போல தொழில் லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்களை மிருத்யு பஞ்சகத்தில் தொடங்கக் கூடாது.

பஞ்சு பெட்ரோல் பொருட்கள் நூல் துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றை அக்னி பஞ்சகத்தில் தொடங்கக் கூடாது.

அரசு மற்றும் பொது நிறுவனங்கள் கடன் வாங்கி நடத்தும் தொழில்களை ராஜ பஞ்சகத்தில் ஆரம்பிக்கக் கூடாது.

நிஷ் பஞ்சகத்தில் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். நல்ல நேரம் பார்க்கும்போது அவருடைய நட்சத்திரத்திற்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.

இராகுகாலம் எமகண்டம் இருக்கக்கூடாது.

கௌரி பஞ்சாங்கத்தில் ரோக சோர விஷம் என்று இருக்கக் கூடாது.

சுப காரியங்களுக்குச் செல்லும் போது வடக்குத் திசை அல்லது கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டும்.

மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் சூரிய உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.


செவ்வாய், 22 ஜூன், 2021

திருக்குறள் 965

பால்: பொருட்பால் 

அதிகாரம்: மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.   

(௯௱௬௰௫ – 965)

விளக்கம்

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்  (௯௱௬௰௫)

—   புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

 

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.  (௯௱௬௰௫)

—   மு. வரதராசன்

 

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.  (௯௱௬௰௫)

—   சாலமன் பாப்பையா


குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்  (௯௱௬௰௫)

—   மு. கருணாநிதி


 மணக்குடவர் உரை:

மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின்.

இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.


பரிமேலழகர் உரை:

குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)


இரா இளங்குமரன் உரை:

 மலை போன்ற உயர்ந்தவரும், மானத்தில் இழிந்த செயல்களை ஒரு குன்றிமணி அளவாகச் செய்வாராயினும், இழிந்தவராகி விடுவர்.

ஆங்கிலம் (English)

Kundrin Anaiyaarum Kundruvar Kundruva

Kundri Anaiya Seyin

—   (Transliteration)

 

Kuṉṟiṉ aṉaiyārum kuṉṟuvar kuṉṟuva

Kuṉṟi aṉaiya ceyiṉ.

—   (Transliteration)

 

Even a hill-like eminence can be brought low By deeds as small as a speck.

 

ஹிந்தி (हिन्दी)

अल्प घुंघची मात्र भी, करते जो दुष्काम ।

गिरि सम ऊँचे क्यों न हों, होते हैं बदनाम ॥ (९६५)

 

தெலுங்கு (తెలుగు)

ఏనుగంటివాడు యెలుకయైపోవును

చెయరాని పనులఁ జేపెనేని. (౯౬౫)

 

மலையாளம் (മലയാളം)

പർവ്വതം പോലുയരത്തിൽ മഹത്വമുണ്ടെന്നാകിലും കുന്നിയോളം പിഴച്ചെന്നാൽ പതനം സംഭവിച്ചിടും (൯൱൬൰൫)

 

கன்னடம் (ಕನ್ನಡ)

ಬೆಟ್ಟದಂತೆ ಎತ್ತರವಾಗಿ ನಿಂತ ನೆಲೆಯಲ್ಲಿ ಉಳ್ಳವರೂ ಗುಲುಗುಂಜಿಯಷ್ಟು ಅಲ್ಪ ಕಾರ್ಯವನ್ನು ಮಾಡೀದರೆ ಕೀಳಾಗಿ ಬಿಡುವರು. (೯೬೫)

 

சமஸ்கிருதம் (संस्कृतम्)

महीधरसमा: सन्त: स्वल्पं गुञ्जाफलोपमम् ।

पतनोन्मुखकार्यं च कुर्वन्तस्ते पतन्त्य्ध: ॥ (९६५)

 

சிங்களம் (සිංහල)

ගරුව අඩුකරවන - සුළු දෙයක් මුත් කළහොත් හෙල මෙන් උස් වුවත් - උස් තැනින් පහතට වැටෙත් මැයි (𑇩𑇳𑇯𑇥)

 

சீனம் (汉语)

人雖名重如山, 行爲偶一不檢, 卽可聲名掃地. (九百六十五)

—   程曦 (古臘箴言)

 

மலாய் (Melayu)

Biar pun orang yang sa-gagah gunong akan kelihatan kechil sa-kira- nya ia melakukan kerja keji, walau pun perbuatan-nya itu sa-kechil biji kunri.

—   Ismail Hussein (Tirukkural)

 

கொரிய (한국어)

훌륭한자가최소한의실수를범하면흔적도없이사라지리라. (九百六十五)

 

உருசிய (Русский)

Даже великие люди будут казаться ничтожными, если совершат низкие деяния, пусть и крохотные, как орешек

 

அரபு (العَرَبِيَّة)

إن الذين حصلوا العزو والشرف لهم لجبل شامخ لا يرتكبون أعمالا غير شريفة وبو كانت مثل حبة كنرى (٩٦٥)

 

 

பிரெஞ்சு (Français)

Ceux qui sont grands (déparia noblesse de leur famille) comme une montagne, se ravalent, lorsqu’ils font un acte vil aussi petit qu’un grain de pois d’Amérique.

 

ஜெர்மன் (Deutsch)

Selbst solche, die wie ein Hügel sind, fallen zu Boden, wenn sie bodenlose Dinge tun – seien sie auch nur so groß wie eine wilde Lakritze.

 

சுவீடிய (Svenska)

Även män vilkas storhet är såsom höga berg blir små när de gör något ont, om än smått som ett Kunri-frö.

—   Yngve Frykholm (Tirukkural)

 

இலத்தீன் (Latīna)

Quamvis montibus sint similes, humilcs fiunt, qui humile’ quid faciant, ctiamsi semini cunri sit simile. (CMLXV)

 

போலிய (Polski)

Nawet czyn tak nieznaczny jak ziarnko jęczmienia Może strącić cię poza krawędzie…

—   Bohdan Gębarski (Tirukkural – Święta księga południowych Indii)


திங்கள், 21 ஜூன், 2021

நகைக்கடை

இன்று 21 ஜூன் 2021. கொரோனாவின் இரண்டாம் தாக்கத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. பலவிதமான கடைகளும் தொழில்களும் செயல்படுகின்றன. ஆனால் நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. ரூபாய் நோட்டில் பரவாத கொரோனா தொற்றா நகைகளில் இருந்து தொற்றிவிடப்போகிறது! முருங்கைக் காயைத் திருகிப் பார்த்து வாங்குகிறார்கள். திருப்தி இல்லை என்றால் வாங்காமல் விட்டுவிடுவார்கள். தேங்காயை குலுக்கியும் விரலால் சுண்டியும் வாங்குகிறார்கள் . மாம்பழத்தை முகர்ந்து பார்த்து வாங்குகிறார்கள். இங்ஙனம் காய்கறிகளும்   பழங்களும் பலராலும் வாங்கப்படுகின்றன. நகைக்கடைகளில் ஸ்பிரே செய்கிறார்கள். டிஸ்இன்பெக்ட் செய்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆளாளுக்கு அள்ள முடியாது. போட்டுப் பார்த்த நகைகள் டிஸ்இன்பெக்ட் செய்யப்படுகின்றன. ஆகவே தயவு செய்து மூடப்பட்டு உள்ள நகைக்கடைகளைத் திறந்து       விற்பனை செய்ய உத்தரவிடுமாறு மாண்புமிகு முதல்வரை வணக்கத்துடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் ஆறுமுகம் நடராஜன்







பிளஸ்-2 படிப்பிற்குப் பிறகான அரசு நுழைவுத் தேர்வுகள்

பிளஸ்-2 படிப்பிற்குப் பிறகு என்னென்ன அரசு நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும்?

மருத்துவப் படிப்பிற்கு நீட்' தேர்வு, என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 'ஜே.இ.இ. தேர்வு, விவசாய சம் பந்தமான படிப்புகளுக்கு 'ஐ.சி.ஏ.ஆர்.' தேர்வு, கலை மற்றும் அறிவியலுக்கு 'சி.யூ.செட்' தேர்வு, வணிகவியல் படிப்பிற்கு 'சி.ஏ.பவுண்டேஷன்' தேர்வு, சட்டம் பயில 'கிளாட்' தேர்வு, ஆர்கிடெக்ஷர் படிக்க 'நாட்டா' மற்றும் 'ஜே.இ.இ.மெயின்' தேர்வு, பேஷன் டெக்னாலஜி படிக்க நிப்ட் தேர்வு, ஓட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளுக்கு 'என்.சி.எச்.எம்.சி.டி. தேர்வு... இப்படி ஒவ்வொரு படிப்பிற்கும், மத்திய அரசின் சார்பில் வருடந்தோறும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிகக் குறைவாகவே இருப்பதால், மிகக் குறைந்த மாணவர்களே இந்தத் தேர்வுகளில் பங்கெடுக்கிறார்கள். வாய்ப்பு பெறுகிறார்கள். 

இட்லி பார்சல் கட்டி வந்த 19 ஜூன் 2021 தினத்தந்தியில் இருந்து
ஆறுமுகம் நடராஜன்.

சனி, 19 ஜூன், 2021

பொன்னமராவதியின் உழைப்பாளிகள்

பள்ளத்தில் மண்ணைக் கொட்டி நிரப்பும் வேலையில் பொன்னமராவதி புதுப்பட்டி இளைஞர்கள். 

இடம்: பிடாரி கோயில் வடக்கு வீதி.

உழைப்பே உயர்வு!


















செவ்வாய், 15 ஜூன், 2021

கள்ளுண்ணாமை

திருக்குறள் பொருட்பால் நட்பியல் அதிகாரம்: கள்ளுண்ணாமை


குறள் 921:

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மணக்குடவர் உரை:
பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

பரிமேலழகர் உரை:
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.

மு. கருணாநிதி உரை:
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

Translation:
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.

Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

குறள் 922:

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

மணக்குடவர் உரை:
கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.

பரிமேலழகர் உரை:
கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.).'

மு. வரதராசன் உரை:
கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

மு. கருணாநிதி உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

Translation:
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.

Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

குறள் 923:

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

மணக்குடவர் உரை:
தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை:
ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும்; குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?

மு. கருணாநிதி உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?

Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?

Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?

குறள் 924:

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

மணக்குடவர் உரை:
நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.

பரிமேலழகர் உரை:
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.

மு. கருணாநிதி உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

Translation:
Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.

Explanation:
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

மணக்குடவர் உரை:
பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

பரிமேலழகர் உரை:
பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

மு. கருணாநிதி உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

Translation:
With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.

Explanation:
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

குறள் 926:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மணக்குடவர் உரை:
உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

பரிமேலழகர் உரை:
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

மு. கருணாநிதி உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

Translation:
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

Explanation:
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

குறள் 927:

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

மணக்குடவர் உரை:
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.

பரிமேலழகர் உரை:
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.).

மு. வரதராசன் உரை:
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.

மு. கருணாநிதி உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

Translation:
Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.

Explanation:
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

குறள் 928:

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

மணக்குடவர் உரை:
கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

மு. கருணாநிதி உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

Translation:
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

குறள் 929:

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

மணக்குடவர் உரை:
கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

பரிமேலழகர் உரை:
களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.

மு. கருணாநிதி உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Translation:
Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

Explanation:
Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

குறள் 930:

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

மணக்குடவர் உரை:
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.

பரிமேலழகர் உரை:
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?

மு. கருணாநிதி உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?

Translation:
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?

Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...