google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நல்வழி வெண்பா 24

சனி, 31 அக்டோபர், 2020

நல்வழி வெண்பா 24


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ்மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 

                        __ ஔவையார், நல்வழி, வெண்பா 24

விளக்கம்
திருநீற்றை அணியாத  நெற்றி வீணானதாகும். நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும். நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும். ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும். நற்குணம் கொண்ட மனைவி இல்லாத வீடு வீணானதாகும்.

 கருத்து:

திருநீற்றால் நெற்றியும், நெய்யால் உணவும், நதியால் ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியால் வீடும் சிறப்படையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...