google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நல்வழி வெண்பா 25

வியாழன், 29 அக்டோபர், 2020

நல்வழி வெண்பா 25

 

ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

                                                                                             __ ஔவையார்

 

விளக்கம்
ஒருவன் தன் வருவாயை விட மிகுதியாகச் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும். போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போலப் பாவித்துத் தவிர்ப்பர். ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...