google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: இறந்தவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இறந்தவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி

என் அப்பா திரு மு. நடராஜன் ஆச்சாரி. அவர் வயது மூப்படைந்து 
தன் 93 ஆம் வயதில் 15.08.2021 அன்று காலமானார். 

முன்னதாக அவருக்கு 26.06.2021 இல் பொன்னமராவதி புதுப்பட்டியில் அவர் வாழ்ந்த வீட்டிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதனால் நன்மையே.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படவில்லை.

மகன்களும் மகளும் மருமகனும் சூழ 
இயற்கை எய்தினார்.

அவரது இறப்பை நான் ஆன்லைனில் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கான ரெஃபரன்ஸ் நம்பர் 38238 ஆகும். இன்னும் ஊருக்குப் போய் இறப்புச் சான்றிதழைப் பெறவில்லை.

ஆனால் அவர் இரண்டாம் முறையாக காரையூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என சில மாதங்களுக்கு முன்பு சர்ட்டிபிகேட் வந்தது. அதை கோவின் இணையதளத்தில் சொல்லி நீக்கினேன். 

ஆனால் அவர் இரண்டாம் தடுப்பூசியை 29.01.2022 ஆம் தேதி அன்று பொன்னமராவதியில் போட்டுக் கொண்டார் என்று மறுபடியும் சர்ட்டிபிகேட் வந்துள்ளது.

மீண்டும் நான் இதை கோவின் தளத்துக்குச் சென்று சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் செய்தால் மறுபடியும் சில நாட்களுக்குப் பின் ஒரு நாளில் எங்கோ போட்டுக் கொண்டார் என்று வருமா?

சொல்லாமல் இருந்தால் பின்னர் மூன்றாம் ஊசி போடப்பட்டது என்று வருமா?
மறைந்தவரின் பழைய ஃபோட்டோ.

 பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
தற்போது மதுரையிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...