google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அவ்வையார் யார்?

திங்கள், 11 மே, 2026

அவ்வையார் யார்?

இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் கொடுத்த நெல்லிக் கனியை உண்டு பல்லாண்டுகள் வாழ்ந்தவர் என்று கருதினால் ஒரே ஒளவையார் தாம் இருந்தனர் என்று யூகிக்கலாம். ஔவையார் என்பது பாட்டியார் என்ற பொருள் தருதலின், இவரது முதுமையை உணரலாம். இந்த அம்மையார் இளைஞர்கட்கும் முதியர்கட்கும் உகந்த பல டாடல்களைப் பாடியவர். சைவ நெறியினர். இவர் பல வள்ளல்களைப் பாடியவர். கூழுக்குப் பாடியவர் ஒளவையார் என்பதால் இவ்வம்மையாரது பண்பாடு நன்கு புலனாகும். இவர் பாணர் குடியினரால் எடுத்து வளர்க்கப்பட்டதாகக் கூறுவர். ஆதி, பகவன் என்ற இருவர்க்கும் பிறந்த எழுவருள் ஒருவர் இவர் என்ற வரலாறும் உண்டு. இவரால் பாடப்பட்ட பாடல்கள் பல. அகத்தில் ஐந்து, குறுந்தொகையில் பதினைந்து, நற்றிணையில் ஏழு, புறத்தில் பதினேழு, உண்டு. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வாக்குண்டாம், அசதிகோவை, பந்தனந்தாதி, ஞானக்குறள், வினாயகர் அகவல் முதலிய தனி நூற்களும், இவைகளே அன்றி மற்றும் பல நூல்களும் இவர் பெயரால் வழங்கப்படுகின்றன. இவர் பல தனித்தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம்.

Gemini Generated Image


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

அவ்வையார் யார்?

இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர் . சங்க காலத்தில் ஒர் ஔவையார் . சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டு...