google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. 

(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. 

(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி 
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. 

(3) *வித்யா* : 

இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.  

(4) *கர்மா* : 

தொழில், குணம், மனைவி 
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் 
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக 
பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

(5) *மரணம்* : 

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் 
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும் 
மருத்துவர் இதே கேள்வியை தான் 
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் 
பிழைப்பார்.  

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப் படுகிறது. இதை மாற்ற யாராலும் முடியாது..

 *விதிவிலக்கு* 
நமக்கு காலத்தில் கிடைக்க வேண்டியது தடையாக இருக்கும் பக்ஷத்தில் ஜோதிடம் மூலமாக செய்ய வேண்டிய பரிகாரம் செய்தால் கிரஹங்களால் தடைபட்ட தோஷங்கள் விலகி செளக்யம் உண்டாகும். ஆனால் மரணத்திற்கு மட்டும் இது பொருந்தாது. 
காரணம் அது கிரஹங்களுக்கு எல்லாம் மேல் உள்ள இறைவன் வசம் உள்ளது. அந்த பொறுப்பை பாரபக்ஷம் பார்க்காத சனிபகவான் சகோதரர் தர்மராஜனிடம் இறைவன் வழங்கியுள்ளாா். 
அங்கே எந்த சலுகையும் (Recommendation) செல்லுபடியாகாது.

வாழ்க வளமுடன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...