google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: குடிப்பதைத் தடுப்போம்

சனி, 9 செப்டம்பர், 2023

குடிப்பதைத் தடுப்போம்

குடிப்பதைத் தடுப்பதே

கோடிகோடி புண்ணியம்

அடிப்பினும் பொறுத்துநாம்

அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

 

மக்களை வதைத்திடும்

மனைவியை உதைத்திடும்

துக்கமான கள்ளினைத்

தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

 

பித்தராகி ஏழைகள்

பேய்பிடித்த கோலமாய்ப்

புத்திகெட்டுச் சக்தியற்றுப்

போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

பாடுபட்ட கூலியைப்

பறிக்குமிந்தக் கள்ளினை

வீடுவீட்டு நாடுவிட்டு

வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

 

கஞ்சியின்றி மனைவிமக்கள்

காத்திருக்க வீட்டிலே

வஞ்சமாகக் கூலிமுற்றும்

வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

 

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்

போனதிந்தக் கள்ளினால் ;

கைநடுக்கங் கால்நடுக்கங்

கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

தேசமெங்கும் தீமைகள்

மலிந்ததிந்தக் கள்ளினால் ;

நாசமுற்று நாட்டினார்

நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

 

குற்றமற்ற பேர்களும்

கொலைஞராவர் கள்ளினால் ;

கத்திகுத்துச் சண்டைவேண

கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

 

குற்றமென்று யாருமே

கூறுமிந்தக் கள்ளினை

விற்கவிட்டுத் தீமையை

விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)

  _நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...