google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

சனி, 9 செப்டம்பர், 2023

கருட அஞ்சலி துதி

கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி: 

குங்குமங்கித வர்ணாய

குந்தேற்து தவளாயச

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்

பட்சிராஜாயதே நமஹ

குடிப்பதைத் தடுப்போம்

குடிப்பதைத் தடுப்பதே

கோடிகோடி புண்ணியம்

அடிப்பினும் பொறுத்துநாம்

அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

 

மக்களை வதைத்திடும்

மனைவியை உதைத்திடும்

துக்கமான கள்ளினைத்

தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

 

பித்தராகி ஏழைகள்

பேய்பிடித்த கோலமாய்ப்

புத்திகெட்டுச் சக்தியற்றுப்

போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

பாடுபட்ட கூலியைப்

பறிக்குமிந்தக் கள்ளினை

வீடுவீட்டு நாடுவிட்டு

வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

 

கஞ்சியின்றி மனைவிமக்கள்

காத்திருக்க வீட்டிலே

வஞ்சமாகக் கூலிமுற்றும்

வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

 

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்

போனதிந்தக் கள்ளினால் ;

கைநடுக்கங் கால்நடுக்கங்

கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

தேசமெங்கும் தீமைகள்

மலிந்ததிந்தக் கள்ளினால் ;

நாசமுற்று நாட்டினார்

நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

 

குற்றமற்ற பேர்களும்

கொலைஞராவர் கள்ளினால் ;

கத்திகுத்துச் சண்டைவேண

கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

 

குற்றமென்று யாருமே

கூறுமிந்தக் கள்ளினை

விற்கவிட்டுத் தீமையை

விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)

  _நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை


ஞாயிறு, 11 ஜூன், 2023

சோப் என்றால் என்ன? டிடர்ஜென்ட் என்றால் என்ன?

நீளச்சங்கிலி அமைப்பை உடைய கார்பாக்சிலிக் அமிலங்களின் (கொழுப்பு அமிலங்கள்) சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளே சோப்பு எனப்படும்.

சோப்பு தயாரிக்க கொழுப்பு காரம் ஆகிய மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன.

பொதுவாக சோப்பு தயாரிக்க பயன்படுபவை – சோடியம் ஹைட்ராக்சைடும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடும்.

கடின சோப்பு தயாரிக்க பயன்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு ஆகும்.

மென் சோப்பு தயாரிக்க பயன்படுவது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஆகும்.

கடின நீரில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோப்பின் சுத்தம் செய்யும் செயலை கட்டுப்படுத்துகின்றன.

சாதாரண சோப்பு கடின நீருடன் பயன்படுத்தப்படும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை வீழ்படியச் செய்கிறது.

டிடர்ஜெண்ட் என்பது சல்போனிக் அமிலம் அல்லது அல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டின் உப்புகளாகும்.

சலவை செய்வதற்கு சோப்பை விட டிடர்ஜெண்ட்களே சிறந்தவை. 

பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பனோடு சல்பியூரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது டிடர்ஜெண்ட் கிடைக்கிறது.

சலவை இயந்திரங்களில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க சேர்க்கப்படுவது சோடியம் சிலிகேட்.

துணிகள் பளிச்சிடுவதற்கு  பயன்படுபவை ப்ளூரெசென்ட் வெண்மை ஏற்றிகள்.

சலவையின் போது சில வகை கறைகளை நீக்க பயன்படுவது சோடியம் பெர்போரேட்.

டிடர்ஜெண்ட் துகள் கெட்டி ஆகாமல் தடுக்க பயன்படுவது சோடியம் சல்பேட்.

இரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கறைகளை நீக்க பயன்படுபவை நொதிகள்.

டிடர்ஜென்ட்டை கடின நீர்  மென்மையான நீர் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம். கடின நீரில் சோப்பை விட டிடர்ஜென்ட் சிறப்பாக செயல் புரியும்.

உப்புத்தன்மையான நீரிலும் அமிலத் தன்னமயான நீரிலும்கூட டிடர்ஜென்ட்டைப் பயன்படுத்தலாம்.

சலவை செய்யும் கலனிலோ, துணிகளிலோ, எந்த விதமான கறைகளையும், அரிப்புகளையும் டிடர்ஜெண்ட் ஏற்படுத்தாது.

குளிர்ந்த நீரில் கூட எளிதாகக் கரையும். கடின நீரிலும் எளிதாக அலசலாம்.

சோப்பைக் கொண்டு சலவை செய்ய முடியாத கம்பளி போன்ற ஆடைகளையும் டிடர்ஜென்ட் கொண்டு சலவை செய்யலாம்.

நீண்ட ஹைட்ரோ கார்பன் சங்கிலித் தொடரை கொண்டுள்ள டிடர்ஜெண்ட்கள் எளிதில் உயிரிய சிதைவிற்கு உட்படும்.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பசை பட்டு உருவாகும் கறையைக் கூட எளிதாக டிடர்ஜென்ட்டைப் பயன்படுத்தி நீக்கி விடலாம்.

துணிகளைப் பாதுகாக்கவும், வெண்மையாகப் பளிச்சிடச் செய்யவும் டிடர்ஜென்ட் பயன்படுகிறது.

சனி, 1 ஏப்ரல், 2023

ஒன்று மட்டும் இப்படி

மரத்தில் உள்ள மற்ற முருங்கைக்காய்களின் சராசரி நீளம் 3 அடி. இந்த ஒன்று மட்டும் நாலே முக்கால் இஞ்ச் (4 ¾). 



இப்படியும் ஒரு வளர்ச்சி. அடக் கடவுளே!

திங்கள், 27 மார்ச், 2023

நக்கீரரைச் சோதித்த சிவபெருமான்

 கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.

நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.

நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள  பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப்  பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப்  பூதம் சொன்னது என்றும் கூறினர்.

உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.

இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.

இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.




சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...