சாலையோர உணவகத்தில் இன்று (31 ஜனவரி 2024) இட்லிப் பொட்டலம் வாங்கினேன். சாப்பிட்டபின் பொட்டலத்துச் செய்தித்தாளில் இருப்பதை வாசிப்பது என் வழக்கம். அது, 8. 10. 2023 ஆம் தேதிய மதுரை தினமலர் நாளிதழ். அதிலுள்ள ஒரு செய்தி இரத்தக்குழாய் ஊசி தொடர்பானது. பொதுவாக நாம் எல்லோரும் இரத்தக்குழாய் ஊசி என்பதை, தவறாக, நரம்பு ஊசி என்கிறோம். vein என்பது சிரை ஆகும். இது ஒரு இரத்த நாளம். பிராண வாயு குறைந்த குருதியை (ஆக்சிஜன் குறைவாயுள்ள இரத்தத்தை) இது நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும். இது நரம்பு அல்ல. தசையில் ஊசி போடுவதைப்போல இந்தக் குழாயிலும் ஊசி போடுவார்கள். எல்லா ஊசிகளையும் இதில் போட்டுவிட மாட்டார்கள். இதில் ஊசி போட்டால் ஊசி மருந்து வேகவேகமாகப் பயனளிக்கும். ஆகவே, அறிஞர்கள் தயவுசெய்து மக்களுக்கும் மீடியாவுக்கும் அறிவுறுத்தி நரம்பு ஊசி என்பதை சிரை ஊசி என்றோ, இரத்தக்குழாய் ஊசி என்றோ குருதி நாள ஊசி என்றோ அல்லது வேறு சரியான பெயரில் சொல்ல அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பகட்டுக்கு மதிப்பு!
ஒளவையார் சிறந்த நாவலர். எனினும், எளிமையினையே விரும்புகின்ற பண்பும் உடையவர். தம் கவிதையைப் போற்றிச், செல்வர்கள் உவந்து தமக்குப் பரிசளித்துப்...
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.