google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: முருகன் மெடிக்கல்ஸ் தர்மலிங்கம்

வியாழன், 27 மே, 2021

முருகன் மெடிக்கல்ஸ் தர்மலிங்கம்

ஆஸ்பத்திரிக்கோ அல்லது மருந்துக்கடைக்கோ போகும்போது அப்போதெல்லாம் சீசாவையும் கொண்டுபோக வேண்டும். மிக்ஸர் மருந்து தருவார்கள். APC, கோடோ பைரின் போன்ற மாத்திரைகளும், பென்சிலின் ஊசியும் பிரபலம். டாக்டர் எழுத்து புரியாது. எப்படிப்பட்ட பிரிஸ்கிரிப்ஷனையும் இன்டர்ப்ரிட் பண்ணும் திறமை  பொன்னமராவதி புதுப்பட்டி மேலரதவீதியில் இருந்த புகழ்பெற்ற முருகன் மெடிக்கல்ஸ் தர்மலிங்கம் அவர்களுக்கு உண்டு. அவர் தான் D. பாலசுப்ரமணியன், D. விவேகானந்தன் இவர்களின் அப்பா. சுறுசுறுப்புக்கு தேனீக்களுக்கு அடுத்தபடியாக இவரைச் சொல்லலாம். கடையில் நடந்துகொண்டே இருப்பார். ஓவர் த கௌண்டர் மருந்து கொடுத்து செலவு வைக்க விடாமல் குணப்படுத்தி விடுவார்.

ஒருமுறை ஓர் உழவனின் நோய்வாய்ப்பட்ட மாட்டுக்கு ஊசி போட மாட்டாஸ்பத்திரி டாக்டரிடம் டிஸ்டில்டு வாட்டர் இல்லை. அவர் ஆக்வா (Aqua) என்று எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொன்னார். அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இது புரியாது. எந்த மருந்துக்கடைக்குப் போனாலும் இல்லை என்றார்கள். சில கடைக்காரர்கள் புதுக்கோட்டையில் அல்லது திருச்சியில் கிடைக்கலாம் என்றார்கள். எழுத்து புரியவில்லை என்றார்கள். முருகன் மெடிக்கல்ஸில்  தர்மலிங்கம் அவர்கள் கடைக்குள்ளேயே வழக்கம் போல உலாத்திக் கொண்டு இருந்தார்கள். டாக்டர் சீட்டு காண்பிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் டிஸ்டில்டு வாட்டரை எடுத்துக் கொடுத்துவிட்டு ஐந்து பைசா கொடுங்கள் என்றார். மாட்டுக்காரருக்குச் சந்தேகம் அப்பிக் கொண்டது. வெறும் 5 பைசாவா! திருச்சிக்குப் போக வேண்டும் என்றார்களே! அவர் தயங்கினார். இவர் தைரியம் சொன்னார். அதுவே சரியான டிஸ்பென்சரியில் கொடுக்கப்பட்ட ஊசிக்கான நீர் ஆகும்.

ஒப்பற்ற மருந்துக்கடைக்காரர். இப்போது நம்மிடையே இல்லை.

பிற பின்பு. 
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...