google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: புதுப்பட்டி சேங்கை

சனி, 29 மே, 2021

புதுப்பட்டி சேங்கை

பாசி படிந்து பச்சை நிறமாய்க் காணப்படும் குளம் சேங்கை எனப்படும். 

பொன்னமராவதி புதுப்பட்டியிலும் ஒரு சேங்கை உண்டு. சதுர வடிவில் இருக்கும் இது பலர் குளிக்கப் பயன்படுகிறது. ஒரு காலத்தில் இது வட்டமாக இருந்த குடிநீர் ஊருணி ஆகும். காலப்போக்கில் குளிப்பதற்கு என்று ஆகி விட்டது.

புதுப்பட்டி சபாபதி நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் தர்மகார்யமாய் வெட்டப்பட்டது. மூக்கன் செட்டியாரின் மகன் பழநியப்பச் செட்டியாரின் பெயர் கொண்டதே பழநியப்பா பார்க். சங்கும் உண்டு.

நீ ர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு. மழை காலத்தில் வடக்கே புதுவளவில் இருந்து வரும் உபரி நீர் ஒரு சிறிய நீர்த்தேக்கத்தில் நிரம்பி பின் சேங்கையை நிரப்பும். நீர் விழும் தூம்பு இரண்டு உண்டு. சேங்கை நிரம்பினால் தெற்கே ஒரு குழாயின் வாயிலாக ஆறுகால் மண்டபத்தின் அருகே கடத்தப்பட்டு வடிகால் பாதையில் சேர்ந்து பின்பு அமரகண்டானை அடையும்.

 ஊருணியில் இரண்டு மட்டங்களில் ஆளோடி உண்டு. நடுவில் பெரும் பள்ளம் உண்டு. சுற்றிலும் கம்பித் தடுப்பு உண்டு. குளிப்பவர்கள் வசதிக்கு என்று அருகில் உள்ள கடைகளில் ஐந்து பைசாவுக்கும் பத்துப் பைசாவுக்கும் லூஸில் எண்ணெய், சிகைக்காய் பவுடர், டாடா ஹேர் ஆயில், சோப்பு, நீலச் சோப்பு, விற்பார்கள். சிறுவர்கள் ஆட்டம் போட்டுக் குளிப்பார்கள். நீரில் டைவ் அடிப்பார்கள். வலை போட்டும், தூண்டில் இட்டும் மீன் பிடிப்பார்கள். தண்ணீர் உப்புத்தன்மையற்றது. ஆகவே கட்டடம் கட்ட தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வார்கள். பிடாரி கோயில் திருவிழாவில் சாமி குளத்தில் இறங்கிக் குளிக்கும்.

குளத்தின் தெற்கேயுள்ள ஆறுகால் மண்டபத்தின் தென்புறத்தில் உள்ள தார்ச் சாலையின் தென்புறத்தில் ஆண்களுக்கான இலவச சிறுநீர்க் கழிப்பிடமும், குளத்தின் வடக்கே பாறையின் அருகில் தண்ணீர் வசதியுடன் பெண்களுக்கான இலவசக் கழிப்பறையும் இருந்தன. இப்போது இல்லை.

அக்காலத்தில் குழாயில் காவிரித் தண்ணீர் வரத்து இல்லை. மே
லும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக வையாபுரி, செம்பொட்டல், ஈஸ்வரமூர்த்தி, வேகுப்பட்டி, மணப்பட்டி, அம்மன் சேங்கை, பூலாங்குறிச்சி என்று அலைவோம். அலைய முடியாதவர்களுக்கு காண்டாக்காரர் குடத்துக்கு 10 காசு என்று விற்பார். 

ஊருணியாய் இருந்த புதுப்பட்டி சேங்கை மாசுபட்டு குளம் ஆனதைப் போல பல குடிநீர் ஊருணிகளும் கெட்டுவிட்டன.

காட்டில் பல விலங்குகள் இருந்தாலும் காடு கெடுவதில்லை. நாட்டில் மனிதர்களின் முறையற்ற சமூகப் பழக்கங்களால் சூழல் கெடுகிறது.

பிற பின்பு. 
வணக்கம். 
அன்புடன் 
ஆறுமுகம் நடராஜன்

பிடாரி அம்மன் துணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...