google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மூக்குப் பொடி

செவ்வாய், 25 மே, 2021

மூக்குப் பொடி

இப்போதெல்லாம் மூக்குப் பொடி போடுபவர்கள் குறைந்து விட்டனர். கெடுதல் குறைந்தது நன்று. சிலர் மூக்குப் பொடி போடும் அழகே தனி. பேரறிஞர் அண்ணா மேடையில் பேசும்போது பொடி போடுவார். ஆனால் யாரும் பார்க்க முடியாது. எப்போது எடுத்தார் எப்போது போட்டார் என்று கண்டுபிடிக்கவே முடியாது. பொன்னமராவதி புதுப்பட்டியில் பலர் மூக்குப் பொடி போடுவதைப் பார்த்திருக்கிறேன். V.V.H.S. அனந்தநாராயணன் ஆசிரியர் பொடி போட்ட கையோடு அறைவார். அறை வாங்கிய மாணவனின் கண்கள் தீயைப் போலக் காந்தும். மாணவிகளை அடிக்க மாட்டார்; திட்டுவார். என் அப்பா டின்ஸ்மித் மு. நடராஜன் ஆச்சாரி பொடியை இரு விரல்களில் பதவிசாக எடுத்து சர்ர்ர்ர்... என்று உறிஞ்சினால் 50 மீட்டருக்குக்  கேட்கும். அந்த இடமே பொடி மணக்கும். சுத்தம் கேட்டு அரு.ச.முரு.சேது செட்டியார் மண்ணெண்ணெய்க் கடை மூக்கையாத் தேவர் வந்துவிடுவார். அவரும் பொடியை ஒரு இழு இழுப்பார். சத்தம் வராது. சுப்பாடு, ராமாடு, ரவியாடு, கோபு இவர்களின் அப்பா கூரைப் பள்ளிக்கூடத்து மூக்குறிஞ்சி வாத்தியார். அவர் ஓசிப் பொடி போடுவார். யாரும் பொடி இல்லை என்றால் தன்னிடம் உள்ள ரிசர்வ் ஸ்டாக் பொடியைத் தந்து உதவுவார். T.A.S. பட்டணம் பொடி அசையும் பொம்மை அருமையாய் இருக்கும். N.V.S. பொடியும் ஒன்று. இப்போது D.S. என்றும், சித்தன் என்றும் பல பொடிகள் வந்தாலும் பொடி போடுபவர்கள் குறைவு. என் தகப்பனாருக்கு 93 வயசு. இன்னும் பொடி தான் அவருக்கு உசிரு.

பிற பின்பு. வணக்கம். 
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...