google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: காளமேகப் புலவரின் பாடல்

புதன், 19 மே, 2021

காளமேகப் புலவரின் பாடல்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!

அதாவது

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !

சொல்லாட்சி : 
காக்கை -- காகம் , காத்தல்
கூகை -- ஆந்தை
கோ -- அரசன்
கூ -- உலகம்
ஒக்க - போல
கைக்கைக்கு -- பகை எதிர்த்து

விளக்கம்

காக்கைக்கு இரவில் பார்வை கிடையாது அப்போது ஆந்தையுடன் சண்டையிட்டால் காக்கை தோற்கும்.  ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது எனவே அது பகலில் காக்கையிடம் தோற்கும்.  அதைப் போல நாட்டைக் காக்கும் அரசன் , கொக்கு தன் இரைக்காக ஒற்றைக்காலில் நெடுநேரம் காத்திருப்பதைப் போல, தான் வலிமை மிக்கவனாய் இருப்பினும் தனக்குத் தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனின் கைக்கு எட்டாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...