google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நவம்பர் 2020

சனி, 7 நவம்பர், 2020

தீபாவளியும் திருக்கார்த்திகையும்

 

தீபாவளி, ஒரு சமஸ்கிருதப் பெயராகும். திருக்கார்த்திகை, ஒரு தூய தமிழ்ப் பெயராகும்.

விளக்குகளின் வரிசைக்கு சமஸ்கிருதத்தில் தீபாவளி என்று பெயர். தீபம்  +  ஆவளி = தீபாவளி. இராமன் வனவாசம் என்னும் காட்டு வாழ்க்கையை முடித்து நாடு திரும்பும் போது அயோத்தி மக்கள் வரிசையாக விளக்கேற்றி வரவேற்றனர் என்பது தீபாவளிக்கான பல கதைகளுள் ஒன்று. தமிழ்நாட்டுக் கதை நீங்கள் அறிந்ததே.

இதைவிடச் சிறந்த பல்வேறு வகையான தீபங்களின் கண்கவர் ஒளிமிகு வரிசைகளை  நாம் திருக்கார்த்திகை இரவில் எங்கும் காணலாம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

 பட்டினத்தார் பாடிய "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரிகள், அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இதன் பின்...