google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: தட்டானுக்கு சட்டை போட்டால்

வியாழன், 20 அக்டோபர், 2022

தட்டானுக்கு சட்டை போட்டால்

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்.”

விளக்கம்:
தானம் கேட்கும் வறியவர்களுக்குத் தட்டாமல் தானம் வழங்குபவர் தட்டான். தட்டானுக்குச் சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க
நினைப்பவரின் எண்ணத்தைத் தடுப்பது. மஹாபலிச் சக்கரவர்த்தி நூறாம் அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் குள்ள உருவத்தில் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் மூன்றடி மண் வேண்டும் என்று தானம் கேட்கிறார். தானம் கேட்பவர் திருமால் என்பதையும் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் என்பதையும் சுக்ராச்சாரியார் உணர்ந்து, தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக மாறி கமண்டலத்தின் மூக்கில் நுழைந்து அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது குட்டைப் பையன் ஆன வாமனன் கட்டையான ஒரு குச்சியை எடுத்து அடைப்பைக் குத்திச் சரி செய்கிறார். ஆகவே சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குத்தப்படுகிறது.

இதுவே “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்." என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...