அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி,
தற்போது மதுரையில் இருந்து.
google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி,
தற்போது மதுரையில் இருந்து.
திருவளர்செல்வன், திருநிறைசெல்வன், திருவளர்செல்வி, திருநிறைசெல்வி ஆகிய இந்நான்கும் வினைத்தொகை. செல்வம், அழகு முதலியன வளர்ந்த, வளர்கின்ற, வளரும், நிறைந்த, நிறைகின்ற, நிறையும் என்று முக்காலங்களையும் குறிக்கும். வினைத்தொகை என்பதால் வலிமிகா இடம். ஒற்று வராது. ஆகவே திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன், திருவளர்ச்செல்வி, திருநிறைச்செல்வி என்று சொல்லக்கூடாது.
இந்த இடத்தில் திரு என்பது திருமணம் என்ற பொருளில் வரவில்லை. செல்வம், அழகு, பொலிவு, நல்வினை, பாக்கியம் என்றே பொருள்படும். அது மட்டும் அல்ல. திரு என்பதற்கு மாங்கல்யம் என்றும் ஒரு பொருள் உண்டு. திருப்பூட்டுதல் என்றால் தாலிகட்டுதல் ஆகும்.
திரு என்பதற்கு இலக்குமி (லட்சுமி/லக்ஷ்மி) என்றும், கடவுள் தொடர்புடைய என்றும் பொருள். (எ.டு) திருமாங்கல்யம், திருவீதி உலா, திருவிளையாடல், திருப்பதி, திருமலை.
தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தமிழ் விலையில்லாப் பாடநூல் அறுபத்து ஆறாம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு உள்ளது.
பிற பின்பு, வணக்கம்.
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி,
தற்போது மதுரையில் இருந்து.
சேரன் செங்குட்டுவனின் வீரத்தை கண்ணகிக்குச் சிலைஎடுத்ததிலிருந்து அறியலாம். தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன...