google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மாட்டுப்பொங்கல்

சனி, 15 ஜனவரி, 2022

மாட்டுப்பொங்கல்

வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி, முன்பு உயர்நிலைப் பள்ளியாய் இருந்தது. அப்போது நான் அங்கே மாணவன். காலையில்  ஸ்கூலுக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம். ஆனால் அதிகாலையில் நான் போவேன். இரவில் வீடு திரும்புவேன். ஏன்?... வாலிபால். அது இலவச விளையாட்டு. பள்ளிக்கூடத்துப் பந்து. சொல்லிக் கொடுக்க விளையாட்டு ஆசிரியர்கள். ஒருவர் மகா கோபக்காரர். அவர் பெரிய P.E.T. ஜெயபாலன் சார். சாதுவான சின்ன P. E. T. அவர் பெயர் மறந்துவிட்டது. பின்னர் மேலும் ஒரு P. E. T. வந்தார். அவர் திரு. வில்லியம் என்று நினைக்கிறேன். எனக்குப் பழக்கம் இல்லை.

காலையில் ஸ்கூலுக்குப் போனால் கேம்ஸ் ஆடிய பின் இரவில்தான் வீட்டுக்குத் திரும்புவேன். ஆகையால் போகும்போதே கட்டுச் சோற்றை எடுத்துச் செல்வேன்.

மதிய இடைவேளையின் போது சாப்பிட்டவுடன் வாலிபால் விளையாடுவோம். பின்னர் ஸ்கூல் முடிந்தவுடன் மேலும் விளையாடுவோம்.

மதியம் எடுத்துச் செல்ல கட்டுச் சோறு இல்லாவிட்டால் என் தந்தையின் பட்டறைக்குச் செல்வேன். அவர் 30 காசு கொடுப்பார். அதை உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பவனில் கொடுத்து பொங்கல் வாங்கி அதை சைக்கிள் ஃபிரேமில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்வேன். பொங்கலை சைக்கிளில் மாட்டியதால் அதுவே எனது மாட்டுப் பொங்கல் ஆகும்.

இதுவே பொன். புதுப்பட்டி உடுப்பி பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆன வரலாறு.

 ந. ஆறுமுகம் மதுரை S. ஆலங்குளத்தில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...