google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நவம்பர் 2019

வியாழன், 21 நவம்பர், 2019

நிலவே என்னிடம் நெருங்காதே



வீணை மீரா கிருஷ்ணா வாசித்த நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் வீடியோ 

வசனம்:

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி  தோழி  ...

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்கொண்ட
உத்தமன் யாரோடி 


பாடல்:

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

ஊமையின் கனவை யாரறிவார்
ஊமையின் கனவை யாரறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடியமேகம் கலையுமுன்னே நீ
பாடவந்தாயோ வெண்ணிலவே

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்... இல்லை...

ஈரல் வறுவல்



சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல் இப்படி செஞ்சு அசத்துங்க

சனி, 9 நவம்பர், 2019

இன்பம்


பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்
எழுந்திடு புதுமை தன்னை
ஏற்றிடல் வாழ்வுக் கின்பம்
குழந்தையின் தளிர்க்கை பட்ட
கூழினை உண்டல் இன்பம்
இழந்ததைப் பெறுதல் இன்பம்
இசைபட வாழ்தல் இன்பம்!

கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்.
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவ ரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்!
-சுரதா



பாவேந்தர் பாரதிதாசனின் சிறந்த திரையிசைப்பாடல்கள்



பாவேந்தர் தமிழுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது . ஆழம் பொதிந்த இலக்கிய நடையுடன் கவிநயம் படைக்கும் கவிஞரின் பாடல்களில் சில திரையிசையாக ஒளிக்கின்றன . அவற்றில் சிலவற்றை தொகுத்து தந்துள்ளோம் . தமிழுக்கும் அமுதென்று பேர் ... சங்கே முழங்கு .. புதியதோர் உலகம் செய்வோம் ...
From: https://www.youtube.com/watch?v=_7qy_W5n8G8

சேரன் செங்குட்டுவனின் வீரம்

சேரன் செங்குட்டுவனின் வீரத்தை கண்ணகிக்குச் சிலைஎடுத்ததிலிருந்து அறியலாம்.  தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன...