google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: முகநூலில் கண்ட மூடநம்பிக்கை

வியாழன், 12 ஜனவரி, 2023

முகநூலில் கண்ட மூடநம்பிக்கை

வக்கிரகம் வசியம் செய்வது எப்படி?

மனிதனுக்கு ஒரு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறதேன்றால்

ஒன்று அந்த கிரக கதிர்வீச்சீன் சமாளிக்கும் தன்மைக்கொண்ட மருத்துவ பயனுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

அது மேல் பூச்சு மற்றும் உள் மருந்தாகவும் இருக்கலாம்.

சில மேல் பூச்சு மருந்து பொருட்களை கீழே கூறுகின்றேன்

1. சூரியன் - கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம்.

சிறிதளவு போதும்.

இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

2. சந்திரன் - தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

3. செவ்வாய் - வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள்,  மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

4. புதன் - மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

5. வியாழன் - கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

6. சுக்கிரன் - பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

7. சனி - கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

8. ராகு - மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்  சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

9. கேது - அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்,

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால்

கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து 100%

தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்த முறைகளை பின்பற்ற தவறினால்

அந்தந்த கிரக வசிய மூலிகைகளை

காப்பு கட்டி

மூலிகைக்கு பலி கொடுத்து வேர் எடுத்து நமக்கு உண்டான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியும்

இது பழங்காலத்து முறை

மலையை சுற்றுவதை விட்டு தலையை சுற்றும்

ஒரு சிறந்த சித்தர்கள் கூறிய முறை

அசைவ பலி கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள்

சைவ பலி கொடுத்து மூலிகை எடுத்துக்கொள்லாம்.

1. சூரியன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை செம் முருங்கைக்கு காப்பு கட்டி சபநிவர்த்தி செய்து வேர் எடுத்து

ஒன்பது நாள் சூரியனுக்கான காயத்ரி மந்திரம் சொல்லி பூஜை செய்து 10வது நாள் தாயத்தில் போட்டு அணிந்துக்கொண்டால்

சூரியன் நமக்கு வசியம் ஆகும்

அதாவது சூரியனிலிருந்து வரும் அதிர்வலைகள் சோதிட ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

2. சந்திரன்.

திங்கள் கிழமை செம்முருங்கைக்கு பொங்கல் படைத்து சந்திரனுக்கு உண்டான

காயத்திரி மந்திரம் செபித்து வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துக்கொண்டால் சந்திரன் வசியம்.

3. செவ்வாய்.

செவ்வாய்க் கிழமை சிவனார் வேம்பு எனும் செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து செவ்வாய்க்கான மந்திரம் சொல்லி வேர் எடுத்து அணிந்துக்கொண்டால் செவ்வாய் வசியம்

செவ்வாய் தோஷமும் தீரும்.

4. புதன்.

புதன் கிழமை இருவேலி செடிக்கு காப்பு கட்டி வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துகொள்ள

புதன் வசியம்.

5. வியாழன்.

வியாழக்கிழமை செங்கழுநீர் செடிக்கு காப்பு கட்டி பலிக்கொடுத்து மறு வியாழன் அன்று வேர் எடுத்து அணிந்துகொண்டால் குரு எனும் வியாழன் வசியம்.

6. வெள்ளி.

வெள்ளிக்கிழமை கருவூமத்தன் செடிக்கு பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு வெள்ளிக்கு வேர் எடுத்து அணிந்துகொண்டால்

வெள்ளி எனும் சுக்கிரன் வசியம்.

7. சனி.

சனிக்கிழமை செவ்வகத்திக்கு காப்பு கட்டி பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு சனிக்கு வேர் எடுத்து அணிந்துகொள்ள சனி வசியம், சனி தோஷம் நிவர்த்தியாகும்

8. ராகு.

மாதத்தில் வரும் அமாவாசை அன்று எட்டி செடிக்கு பொங்கல் படைத்து

9வது நாள் எடுத்து அணிந்துகொள்ள ராகு வசியம்,

ராகு தோஷம் நிவர்த்தியாகும்.

9. கேது.

சூரிய கிரகணத்தில் வேம்பு செடிக்கு காப்பு கட்டி அந்தி சந்தி பூஜை செய்து

முன்பு சொன்னதைப் போல 9வது நாள் வேர் பிடுங்கி அணிந்துக்கொள்ள

கேதுவும் வசியமாவார்.

குறிப்பாக எல்லா கிரகத்துக்கும் காயத்திரி மந்திரம் உண்டு அதை அந்தந்த கிரகத்துக்கான மூலிகை எடுக்கும் போது கட்டாயம் 1008உரு ஏற்ற வேண்டும்.

அதேபோல் எல்லா மூலிகைக்கும் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

(பலி என்பது கோழி - அல்லது எலுமிச்சை)

மேல் சொன்னதைப் போல் தவறாமல் செய்தால் 100% கிரகங்கள் நமக்கு

வசியமாகி அதற்கான பொல்லாத நேரத்திலும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும் என்பது சித்தர்கள் கூறிவிட்டு சென்ற ரகசியம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...