google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு

திங்கள், 28 பிப்ரவரி, 2022

TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு

தேர்வுக்கான தேதி, பாடத்திட்டம், கட் -ஆஃப், தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்:

தமிழக அரசுத்துறைகளில் நான்காம் நிலை பதவிகளை நிரப்ப TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வே குரூப் 4 தேர்வு ஆகும். 

இதில் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் பொதுவாக சேர்த்து நடத்தப்படலாம்.

தமிழக அரசு வேலை பெற எளிமை யான வழி இத்தேர்வை எழுதுவதாகும்.
 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இத்தேர்வை எழுதலாம். ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. அது கொள்குறி வகை மட்டுமே. விரிவான எழுத்துத் தேர்வு இல்லை.

TNPSC குரூப் 4 தேர்வு, ஏழு விதமான பதவிகளுக்கானது. அவையாவன:

இளநிலை உதவியாளர் (Junior Assistant)
தட்டச்சர் (Typist)
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
வரித் தண்டலர் (Bill Collector)
நில அளவர் (Field Surveyor)
வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆகவே அவர்களுக்கு வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

வயதுத் தகுதி:

இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

மொத்தம் 200 வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்.
மொத்தம் 300 மதிப்பெண்கள்.

மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகள் உண்டு.

வினாக்கள் கொள்குறி வகையில் மட்டுமே (Objective Type) இருக்கும்.

பாடத்திட்டம்:

மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
தற்போது, தமிழ் பாடத் தாளில் குறைந்தது 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே பாடத்திட்டம் மாறலாம்.

அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவுப் பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின்னர் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC ஆல் வெளியிடப்படுவதாகும்.  பெரும்பாலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடநூல்களில் இருந்தே வினாக்கள் அமையும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் சில  நேரங்களில் கேள்விகள் கேட்கப்படலாம்.  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்றாகப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

TNPSC யின் பாடத்திட்டத்தைப் பார்த்து, தேவையானவற்றை மட்டும் படித்தால் போதும்.

ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்கான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்துக் கொள்வது நல்லது.

முந்நூறு மதிப்பெண்களில் தொண்ணூறு எடுத்தால் பாஸ். ஆனால் இது போதாது.

கட் -ஆஃப் (Cut off):

பொதுவாக போட்டி மிகுதி.  காலிப் பணி இடங்களை விட தேர்வு எழுதுவோர் மிகுதி. ஆகவே நிறைய மதிப்பெண்களைப் பெறவேண்டும். அதற்காகவே  கட் ஆஃப் மதிப்பெண்    வரையறுக்கப்படும்.

கட்-ஆஃப் மதிப்பெண் இன மற்றும் பிரிவு வாரியாக வேறுபடும்.

வென்று வேலையில் அமர வாழ்த்துகள்.

அன்புடன்
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...