google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

வியாழன், 31 மார்ச், 2022

TNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கானஅறிவிப்பை  வெளியிட்டுள்ளது. 

மார்ச் 30 இலிருந்து ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.

குரூப் 4 காலிப்பணியிடங்கள் மொத்தம் 7,382.

எல்லாப் பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். இதில் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். 

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 

அக்டோபர் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்.


இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் 55 இடங்கள் உள்ளன. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். என்.சி.சி., பிரிவில் குறைந்தது இரண்டாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 19 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 13.4.2022 மாலை 3:00 மணி

விபரங்களுக்கு: https://joinindianarmy.nic.in

நன்றி தினமலர் 22/03/2022

செவ்வாய், 29 மார்ச், 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

*தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....*

*தேங்காய் சகுனம்:*

1) தேங்காய் முடிபாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால், செல்வம் சேரும்.

2) சரிசமமாக உடைந்தால், துன்பம் தீரும், செல்வம் பெருகும்.

3) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால், ரத்தினம் சேரும்.

4) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால், அழியாத செல்வம் உண்டாகும்.

5) சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு, ஆபரண லாபம் உண்டாகும்.

6) ஓடு தனியாக கழன்றால், துன்பம் வரும்.

7) நீளவாக்கில் உடைந்தால், தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.

8) உடைக்கும் பொழுது கைபிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.

9) முடி பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதமாகும்.

10) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால், வேண்டும் காரியம் உடனே வெற்றியைத் தரும்.

நன்றி.


சனி, 19 மார்ச், 2022

தமிழ்ப்படுத்துக!

 தமிழ் படும் பாடு:

"அதிகாரிகளின் அஜாக்கிரதையால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்" என்று தினமலர் நாளிதழின் மதுரை பதிப்பு 19/02/2021 ஆம் தேதிய செய்தியை நேற்றிரவு அதாவது 18 மார்ச் 2022 அன்று உணவுப் பொட்டலத்தைப் பிரித்து உணவை உண்டபின் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. 

இந்த நான்கு சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இல்லையா?

"அலுவலர்களின் கவனமின்மையால் மிகுந்துள்ள ஊடுருவல்கள்" என்று சொல்லலாமா?

இச்செய்தியை, ஆங்கில நாளேடு எவ்வாறு வெளியிடும்? 

"Increased encroachment due to the carelessness of officers." என்றா? 
அல்லது 
"Carelessness of Government Officials leads to Increased Encroachments" என்றா?

இருக்காது... 

ஜர்னலிசத்தின்படி எழுதுவார்கள்.


பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
இப்போது மதுரையில் இருந்து.

புதன், 9 மார்ச், 2022

எப்படிச் சாப்பிட வேண்டும்?

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

மு.வ. உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று, அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றிய பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

குறள் 943:

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

கலைஞர் உரை:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

குறள் 944:

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

மு.வ. உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.

குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

மு.வ. உரை:
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.

குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

மு.வ. உரை:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதாய் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

கலைஞர் உரை:
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.


குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

மு.வ. உரை:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

மு.வ. உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

கலைஞர் உரை:
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
மு.வ. உரை:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

கலைஞர் உரை:
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து

மு.வ. உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.


ThirukkuraL Chapter 95 Medicine

Excess or deficiency [in food and work] will result in disease 
due to imbalance in wind, bile and phlegm.                                                  [941]

There is no need of medicine for the body; if one eats, 
after making sure that  what was eaten has been fully digested.            [942]

Past food digested, eat in proper measure; 
this is the way to a long life in the human body.                                            [943]


Assured of digestion, and hunger as fire,
eat with care, food which is not disagreeable.                            (944)

If food which is not disagreeable, is taken with self denial,
no harm will come to life because of diseases.                                         [945]

As health and happiness are to a moderate eater,
so disease sticks to a glutton.                                                                          (946)

Indiscriminate eating, far beyond one's digestive powers,
will cause limitless ills.                                                                                      [947]

Diagnose the disease; discover the cause;
seek the proper remedy and apply it with skill.                                             [948]

A doctor should treat, properly taking account of
the patient's nature, the disease state and the season.                               [949]

The patient, the doctor, the remedy and the attendant;
Medicine comprises these limbs with four attributes to each.                       [950]


திங்கள், 28 பிப்ரவரி, 2022

TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு

தேர்வுக்கான தேதி, பாடத்திட்டம், கட் -ஆஃப், தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்:

தமிழக அரசுத்துறைகளில் நான்காம் நிலை பதவிகளை நிரப்ப TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வே குரூப் 4 தேர்வு ஆகும். 

இதில் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் பொதுவாக சேர்த்து நடத்தப்படலாம்.

தமிழக அரசு வேலை பெற எளிமை யான வழி இத்தேர்வை எழுதுவதாகும்.
 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இத்தேர்வை எழுதலாம். ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. அது கொள்குறி வகை மட்டுமே. விரிவான எழுத்துத் தேர்வு இல்லை.

TNPSC குரூப் 4 தேர்வு, ஏழு விதமான பதவிகளுக்கானது. அவையாவன:

இளநிலை உதவியாளர் (Junior Assistant)
தட்டச்சர் (Typist)
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
வரித் தண்டலர் (Bill Collector)
நில அளவர் (Field Surveyor)
வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆகவே அவர்களுக்கு வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

வயதுத் தகுதி:

இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

மொத்தம் 200 வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்.
மொத்தம் 300 மதிப்பெண்கள்.

மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகள் உண்டு.

வினாக்கள் கொள்குறி வகையில் மட்டுமே (Objective Type) இருக்கும்.

பாடத்திட்டம்:

மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
தற்போது, தமிழ் பாடத் தாளில் குறைந்தது 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே பாடத்திட்டம் மாறலாம்.

அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவுப் பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின்னர் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC ஆல் வெளியிடப்படுவதாகும்.  பெரும்பாலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடநூல்களில் இருந்தே வினாக்கள் அமையும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் சில  நேரங்களில் கேள்விகள் கேட்கப்படலாம்.  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்றாகப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

TNPSC யின் பாடத்திட்டத்தைப் பார்த்து, தேவையானவற்றை மட்டும் படித்தால் போதும்.

ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்கான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்துக் கொள்வது நல்லது.

முந்நூறு மதிப்பெண்களில் தொண்ணூறு எடுத்தால் பாஸ். ஆனால் இது போதாது.

கட் -ஆஃப் (Cut off):

பொதுவாக போட்டி மிகுதி.  காலிப் பணி இடங்களை விட தேர்வு எழுதுவோர் மிகுதி. ஆகவே நிறைய மதிப்பெண்களைப் பெறவேண்டும். அதற்காகவே  கட் ஆஃப் மதிப்பெண்    வரையறுக்கப்படும்.

கட்-ஆஃப் மதிப்பெண் இன மற்றும் பிரிவு வாரியாக வேறுபடும்.

வென்று வேலையில் அமர வாழ்த்துகள்.

அன்புடன்
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து.


வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருக்குறள் வலியறிதல்

அதிகாரம் 48
வலியறிதல் - Judging strength

பத்துக் குறள்கள், அறிஞர்களின் விளக்கங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார்

குறள் 471:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வ உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

குறள் 472:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

மு.வ உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

மு.வ உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

மு.வ உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

கலைஞர் உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

கலைஞர் உரை:
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

மு.வ உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

குறள் 477:
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

கலைஞர் உரை:
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

மு.வ உரை:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

குறள் 478:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

கலைஞர் உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

மு.வ உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

கலைஞர் உரை:
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

மு.வ உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

கலைஞர் உரை:
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

மு.வ உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.


ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார்

அதிகாரம் 48
வலியறிதல் - Judging strength

1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
Judge act and might and foeman's strength
The allies' strength and go at length.        471

2. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
Nothing hampers the firm who know
What they can and how to go.        472

3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
Many know not their meagre might
Their pride breaks up in boastful fight.        473

4. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
Who adapts not, outsteps measure
And brags himself-his fall is sure.        474

5. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
Even the gentle peacock's plume
Cart's axle breaks by gross volume.        475

6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.
Beyond the branches' tip who skips
Ends the life as his body rips.        476

7. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
Know the limit; grant with measure
This way give and guard your treasure.        477

8. ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
The outflow must not be excess
No matter how small income is.        478

9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
Who does not know to live in bounds
His life seems rich but thins and ends.        479

10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
Wealth amassed quickly vanishes
Sans level if one lavishes.        480

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...